Sunday 28 August 2011

மழை !




அடியே மழையே !

நீ பகலில் வந்தால் நான் உன் அழகை ரசிப்பேன் 
என்பதால் நாணம்கொண்டு இரவில் மட்டும் வந்துபோகிராயோ ?
நீ இடியின் ஒலிக்கு ஆடியபோது !
மின்னல் ஒளியின் வெளிச்சத்தில் 
கண்டு ரசித்தேனடி உன் நிர்வாண அழகை !


தூக்கு தண்டனை :

கருணை மனு ரத்தானதில் இருந்து 
தமிழகத்தை கடக்கும் மேகங்கள் கூட 
கண்ணீரை இடியுடன் சிந்திவிட்டு 
செல்கிறது மழையாக !


சனிக்கிழமை இரவு  
வானமும் சரக்கடிக்குமோ ?
கொட்டுதுயா மழை !
சூடான சென்னையில் !


பகலில் சென்னையை வியர்க்கவைத்தது மின் தடை !
தற்பொழுது குளிரவைக்குது இயற்க்கை மழை !




Monday 22 August 2011

கலைஞரே :





கலைஞரே :


சாக்ரடீசின் பகுத்தறிவை படித்ததில்லை !
ப்ளேட்டோவின் தத்துவங்கள் ஞாபகமில்லை !
பெரியாரின் குறளை கேட்டதில்லை !
அண்ணாவை நேரில் பார்த்ததில்லை !
இவ்வனைவரையும் காண்கிறோம் உன் பேச்சிலே !!

இவ்வாறு கிளிஜோசியன் போல் உன்னை 
நான் புகழ்வது பகுத்தறிவில்லை !!!
உன் புகழ் நான் சொல்லி தெரிவதில்லை !

நீ உதிர்த்த சொல்லை திரும்ப பெற்றதில்லை !
அதற்காக எவரிடமும் மன்னிப்பு கேட்டதில்லை !
" என் உயிரிலும் மேலான அன்பு உடன்பிறப்புகளே "
என்ற உன் சொல்லில் சிலிர்க்காத உடல்கலில்லை !

ராமன் கட்டிய ? பாலத்தை நம்புபவர்கள் 
நீ கட்டிய பாலத்தின் மீது போகிறார்கள் !
நீ தந்த சமத்துவபுரத்தில் குடியேறியவர்கள் 
உன்னை கோட்டையை விட்டு வெளியேற்றினார்கள் !

காப்பீட்டுதிட்டதில் உயிர் பிழைத்தவன் கூட 
உன்னை கட்டையில் போக சொல்கின்றான் !
நீ கட்டுமரமாக மிதந்தாலும் !
அதிலேயே அவர்கள் பயணம் செய்தாலும் !
உனக்கு செவ்வாய் கிரகத்திலும் சொத்து 
இருப்பதாக பேசிக்கொண்டு வானத்தை நோக்கி 
செவ்வாயை தேடி வாயை பிளக்கின்றான்!

ஓய்வறியா சூரியனுக்கு 
ஓய்வு கொடுத்த மக்களுக்கு 

நன்றி சொல்ல வார்த்தை இல்லை எங்களுக்கு ! 
நன்றி சொல்ல வார்த்தை இல்லை எங்களுக்கு ! 

சுதந்திர தினத்தை எதிர்ப்பவர்களே :




சுதந்திர தினத்தை எதிர்ப்பவர்களே :

சரி நீங்கள் எதிர்பார்க்கும் சுதந்திரமே கிடைத்துவிட்டாலும்.

அங்கே மேலவளவு தலித்களை வெட்டி கொன்ற ஜாதி வெறியர்கள் பிறக்க மாட்டார்களா ? பலர் படுகொலைக்கு ஆளான கோவை மதக்கலவரக்காரர்கள் பிறக்க மாட்டார்களா ?

சரி நாளைக்கே தமிழகத்தை தனி நாடாக அறிவித்து விட்டால் தமிழகத்தில் இருக்கும் தெலுங்கு பேசும் ஜாதியினர் நாயுடு , நாயக்கர் , ரெட்டி போன்றோர் எங்களுக்கு தமிழகத்தை பிரித்து தனி நாடு வேண்டும் என்று கேட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள் ? இந்தா ராசா வாங்கிக்கோ என்று தாரை வார்ப்பீர்களா ? 

அடுத்து தமிழகத்தில் 2 கோடி வன்னியர்கள் இருக்கிறார்கள் எங்களுக்கு தனி நாடு வேணும்னு ராமதாஸ் தொடை தட்டுவார் அவர்க்கு கொஞ்சம் இந்தா ராசா எடுத்துக்கோ என்று கொஞ்சம் தமிழகத்தை தாரை வார்ப்பீர்களா ? 

( தெலுங்கானா : அவர்களுக்குள் என்ன பிரிவினை ஒரே மொழி ஆனால்
அடித்துகொள்ளவில்லையா ? )

தயவு செய்து சிந்தியுங்கள் நம் தெருவில் உள்ள வேற்றுமைகளை , பிரிவினைகளை முதலில் திருத்தாமல் மாநிலத்தின் , நாட்டின் பிரிவினை பற்றி பேசுவது நியாயமா ?

சுதந்திர தின வாழ்த்துக்கள் இந்தியர்களே !