நீ பகலில் வந்தால் நான் உன் அழகை ரசிப்பேன்
என்பதால் நாணம்கொண்டு இரவில் மட்டும் வந்துபோகிராயோ ?
நீ இடியின் ஒலிக்கு ஆடியபோது !
மின்னல் ஒளியின் வெளிச்சத்தில்
கண்டு ரசித்தேனடி உன் நிர்வாண அழகை !
தூக்கு தண்டனை :
கருணை மனு ரத்தானதில் இருந்து
தமிழகத்தை கடக்கும் மேகங்கள் கூட
கண்ணீரை இடியுடன் சிந்திவிட்டு
செல்கிறது மழையாக !
சனிக்கிழமை இரவு
வானமும் சரக்கடிக்குமோ ?
கொட்டுதுயா மழை !
சூடான சென்னையில் !
பகலில் சென்னையை வியர்க்கவைத்தது மின் தடை !
தற்பொழுது குளிரவைக்குது இயற்க்கை மழை !
No comments:
Post a Comment