Monday 22 August 2011

சுதந்திர தினத்தை எதிர்ப்பவர்களே :




சுதந்திர தினத்தை எதிர்ப்பவர்களே :

சரி நீங்கள் எதிர்பார்க்கும் சுதந்திரமே கிடைத்துவிட்டாலும்.

அங்கே மேலவளவு தலித்களை வெட்டி கொன்ற ஜாதி வெறியர்கள் பிறக்க மாட்டார்களா ? பலர் படுகொலைக்கு ஆளான கோவை மதக்கலவரக்காரர்கள் பிறக்க மாட்டார்களா ?

சரி நாளைக்கே தமிழகத்தை தனி நாடாக அறிவித்து விட்டால் தமிழகத்தில் இருக்கும் தெலுங்கு பேசும் ஜாதியினர் நாயுடு , நாயக்கர் , ரெட்டி போன்றோர் எங்களுக்கு தமிழகத்தை பிரித்து தனி நாடு வேண்டும் என்று கேட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள் ? இந்தா ராசா வாங்கிக்கோ என்று தாரை வார்ப்பீர்களா ? 

அடுத்து தமிழகத்தில் 2 கோடி வன்னியர்கள் இருக்கிறார்கள் எங்களுக்கு தனி நாடு வேணும்னு ராமதாஸ் தொடை தட்டுவார் அவர்க்கு கொஞ்சம் இந்தா ராசா எடுத்துக்கோ என்று கொஞ்சம் தமிழகத்தை தாரை வார்ப்பீர்களா ? 

( தெலுங்கானா : அவர்களுக்குள் என்ன பிரிவினை ஒரே மொழி ஆனால்
அடித்துகொள்ளவில்லையா ? )

தயவு செய்து சிந்தியுங்கள் நம் தெருவில் உள்ள வேற்றுமைகளை , பிரிவினைகளை முதலில் திருத்தாமல் மாநிலத்தின் , நாட்டின் பிரிவினை பற்றி பேசுவது நியாயமா ?

சுதந்திர தின வாழ்த்துக்கள் இந்தியர்களே !

No comments:

Post a Comment