சுதந்திர தினத்தை எதிர்ப்பவர்களே :
சரி நீங்கள் எதிர்பார்க்கும் சுதந்திரமே கிடைத்துவிட்டாலும்.
அங்கே மேலவளவு தலித்களை வெட்டி கொன்ற ஜாதி வெறியர்கள் பிறக்க மாட்டார்களா ? பலர் படுகொலைக்கு ஆளான கோவை மதக்கலவரக்காரர்கள் பிறக்க மாட்டார்களா ?
சரி நாளைக்கே தமிழகத்தை தனி நாடாக அறிவித்து விட்டால் தமிழகத்தில் இருக்கும் தெலுங்கு பேசும் ஜாதியினர் நாயுடு , நாயக்கர் , ரெட்டி போன்றோர் எங்களுக்கு தமிழகத்தை பிரித்து தனி நாடு வேண்டும் என்று கேட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள் ? இந்தா ராசா வாங்கிக்கோ என்று தாரை வார்ப்பீர்களா ?
அடுத்து தமிழகத்தில் 2 கோடி வன்னியர்கள் இருக்கிறார்கள் எங்களுக்கு தனி நாடு வேணும்னு ராமதாஸ் தொடை தட்டுவார் அவர்க்கு கொஞ்சம் இந்தா ராசா எடுத்துக்கோ என்று கொஞ்சம் தமிழகத்தை தாரை வார்ப்பீர்களா ?
( தெலுங்கானா : அவர்களுக்குள் என்ன பிரிவினை ஒரே மொழி ஆனால்
அடித்துகொள்ளவில்லையா ? )
தயவு செய்து சிந்தியுங்கள் நம் தெருவில் உள்ள வேற்றுமைகளை , பிரிவினைகளை முதலில் திருத்தாமல் மாநிலத்தின் , நாட்டின் பிரிவினை பற்றி பேசுவது நியாயமா ?
சுதந்திர தின வாழ்த்துக்கள் இந்தியர்களே !
No comments:
Post a Comment